ஜெர்மனி அரசு தனது நாட்டில் மருத்துவ விடுப்பு மற்றும் பணி ஓய்வு தொடர்பான விதிமுறைகளை அதிரடியாக மாற்றியுள்ளது.
பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டும், சமூகத்தில் அதிகப்படியான மருத்துவ விடுப்பு எடுப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், இந்த புதிய சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மருத்துவ விடுப்பு விதிகளில் மாற்றம்:
ஜெர்மனி அரசின் புதிய அறிவிப்பின்படி, இனி ஒருநாள் உடல்நிலை சரியில்லை என்றாலும் மருத்துவர் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடைமுறையில் இருந்த 3 நாள் சலுகை மற்றும் கோவிட் காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி மூலம் சான்றிதழ் பெறும் முறை அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. ஊழியர்கள் கட்டாயம் மருத்துவர் நேரில் பரிசோதனை செய்து வழங்கும் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஓய்வு பெறும் வயது உயர்வு:
மருத்துவ விடுப்பு விதிகள் மட்டுமன்றி, பணி ஓய்வு தொடர்பான விதியிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, வேலையிலிருந்து ஓய்வு பெறும் வயதும் 65 இல் இருந்து 67 ஆகப் படிப்படியாக உயர்த்தப்படுகிறது. ஜெர்மனியின் பிரதமரான பிரைட்ரிச் மெர்ஸ் இந்தச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளார். பொருளாதாரத்தைச் சீரமைக்கவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
