அளுத்கம - தர்கா நகர பிரதேசத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்த தாய் மற்றும் அவரது மகள் ஆகியோர் களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிதி மோசடிகள் மற்றும் பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பல நீதிமன்றங்களால் இவர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாகலந்தாவை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய தாயும், அவரது 15 வயதுடைய மூத்த மகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
