Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

சீறும் காற்று, கொந்தளிக்கும் கடல்! இலங்கையின் இந்த மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கான பலத்த காற்று மற்றும் கடற்கொந்தளிப்பு குறித்த விசேட எச்சரிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.



​இன்று விடுத்துள்ள அவசர வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

​60 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்போகும் காற்று!

​வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் (km/h) வரை திடீரென அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாகக் குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காட்சியளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

​மேலும், மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது சுமார் 2.0 மீட்டர் முதல் 2.5 மீற்றர் வரை உயரே எழும்பக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

​கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்:

​இந்தக் கடுமையான கடற்கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்று காரணமாக, கடற்படையினரும் கடற்றொழில் சமூகத்தினரும் (Fishermen) கடலுக்குச் செல்லும்போது மிகவும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அடுத்தடுத்து வெளியிடப்படும் வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக