நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 4,000 க்கும் மேற்பட்ட அதிபர் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தகுதியான விண்ணப்பதாரர்களை தாமதமின்றி நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பல தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக தலைமை ஆசிரியர் நியமனத்திற்கான போட்டி பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அதனை விரைவில் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment