Top News

இலங்கையில் வாகனம் வாங்குவதற்காக காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

 இலங்கையில் அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளும் மே 1 முதல் கணிசமாக அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.




சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) 1.25 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய வரி திருத்தம், தனிநபர் மற்றும் பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளர்களுக்கு இடையிலான வரிவிதிப்பு நடைமுறைகளைச் சீரமைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மறுபடியும் ஆட்டம் காணும் தங்கத்தின் விலை! நகைபிரியர்களுக்கு அதிர்ச்சி

இருப்பினும், இந்த நடவடிக்கை தற்போது நுகர்வோர் மத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னர் தனிநபர் இறக்குமதியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த இந்த வரி, தற்போது அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சுங்க அனுமதி புள்ளியிலேயே அறவிடப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் சிறிய ரக வாகனங்களின் விலை 130,000 ரூபாய் முதல் 215,000 ரூபாய் வரையிலும், நடுத்தர ரக வாகனங்களின் விலை 345,000 ரூபாய் முதல் 510,000 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Land Cruiser) போன்ற உயர் ரக வாகனங்களின் விலை 980,000 ரூபாய் முதல் 1.45 மில்லியன் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கு புவிசார் அரசியல் மற்றும் சர்வதேச விலையேற்றம் காரணமாக வாகனங்களின் மதிப்பீடுகள் மாறியுள்ள நிலையில், இந்த வரி உயர்வு நுகர்வோர் மற்றும் சந்தை தேவையில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post