மூடப்படுகிறது மதுபானசாலைகள்? மதுப்பிரியர்களுக்கு சற்றுமுன் அதிர்ச்சி செய்தி!

Valluvan Media
0

 எதிர்வரும் மே மாதத்தில் சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் வைகாசி (வெசாக்) விசாக பூரணையை முன்னிட்டு, நாட்டின் அனைத்து மதுபான சாலைகளையும் மூன்று நாட்களுக்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.




அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விசேட தினங்களைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கலால் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, பின்வரும் நாட்களில் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்:

மே 01 (வெள்ளிக்கிழமை): சர்வதேச தொழிலாளர் தினம் (மே தினம்).

மே 30 (சனிக்கிழமை): வைகாசி (வெசாக்) விசாக பூரணை தினம்.

மே 31 (ஞாயிற்றுக்கிழமை): வைகாசி விசாக பூரணைக்கு அடுத்த நாள்.

மகா நாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு இணங்க, இந்த ஆண்டு வைகாசி விசாக பூரணைதினம் மே 30-ஆம் திகதி அனுசரிக்கப்படவுள்ளதுடன், அதற்கு அடுத்த நாளான மே 31-ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மே 27 முதல் ஜூன் 02 வரை 'தேசிய வெசாக் வாரம்' (State Vesak Week) ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் நாடு முழுவதும் பல்வேறு சமய மற்றும் கலாசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top