கொடுப்பனவுக்கு வங்கிகணக்கு விபரங்களை சமர்ப்பிக்கவும்! அரசின் உடனடி அறிவிப்பு

Valluvan Media
0

 எரிபொருள் மானியம் பெற்றுக் கொள்ளவுள்ள கடற்தொழிலாளர்களை பயன்பாட்டிலுள்ள வங்கிக் கணக்கு விபரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.




அந்த வகையில் குறித்த கடற்தொழிலாளர்கள் தமது பயன்பாட்டிலுள்ள வங்கிக் கணக்கு விபரங்களை உடனடியாக கடற்றொழில் பரிசோதகரிடம் சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகே அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் மானியம் பெற்றுக் கொள்வதற்காக சில கடற்தொழிலாளர்கள் வழங்கிய வங்கிக் கணக்குகள் தற்போது செயற்பாட்டில் இல்லை.

தத்தமது முழுப்பெயர் மற்றும் பயன்பாட்டிலுள்ள வங்கி கணக்கிலக்கம், வங்கியின் பெயர் மற்றும் கிளை ஆகிய விபரங்களை கடற்றொழில் பரிசோதகரிடம் கையளிக்க வேண்டும்.

மே மாதத்திற்குள் நாட்டிலுள்ள அனைத்து கடற்தொழிலாளர்கள் சமூகத்தினருக்குமான எரிபொருள் மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top