Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

இலங்கையில் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்

 சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை திடீரென அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.



அதன்படி ஒரு அவுண்ஸ் தங்கவிலை 4,493.79 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 358800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 390000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,400 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தங்க விலை உலக சந்தை விலை அமெரிக் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி காரணமாக தளம்பல் நிலையை பதிவு செய்து வருகிறது.

2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் தங்க விலை பொதுவாக உயர்வு போக்கில் இருந்தது, சில நாட்களில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன.  
இந்த நிலையில் அண்மையில் வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்த நிலையில் மீண்டும் மளமளவென விலை குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது 4 இலட்சத்தை அண்மித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக