Top News

மஹிந்த ஆட்சியில் பாதாள உலக குழுவாக செயல்பட்ட பிரபல அரசியல்வாதிகள்! யார் யார் தெரியுமா? அம்பலமாகும் தகவல்கள்!

 


இலங்கையில் செயற்படும் குற்ற கும்பல்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த 12 அரசியல்வாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசேட விசாரணைகளின் போதே இந்த அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக அரசியல்வாதிகளிடமிருந்து ஏற்கனவே வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. 
அத்துடன், ஏனைய அரசியல்வாதிகளிடமும் விசாரணைகளை முன்னெடுத்து, சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக செய்தி ளெியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் முக்கிய அமைச்சுப் பதவிகளில் வகித்தவர்களே இவ்வாறு சிக்கியுள்ளதாக தெரிய வருகிறது.

Post a Comment

Previous Post Next Post