2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை எழுதுபொருள் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், பயனாளி விவரங்களை உள்ளிடுதல், சரிபார்த்தல் மற்றும் பற்றுச்சீட்டுகளை (Receipts) ஸ்கான் செய்தல் ஆகிய பணிகளுக்கான காலக்கெடு நீட்டிக்கப்படமாட்டாது என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
முக்கியமான காலக்கெடு விபரங்கள்:
|
பணி |
இறுதித் திகதி |
|---|---|
|
பயனாளி விவரங்களை உள்ளிடுதல் |
ஜூலை 25 |
|
பயனாளி விவரங்களைச் சரிபார்த்தல் |
ஜூலை 27 |
|
பற்றுச்சீட்டுகளை ஸ்கான் செய்தல் |
ஓகஸ்ட் 30 |
அமைச்சு வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேதிகள் இறுதியானவை என்றும், இதில் எந்த மாற்றமும் அல்லது கால நீட்டிப்பும் செய்யப்படாது என்றும் கல்வி அமைச்சு வலியுறுத்திக் கூறியுள்ளது. எனவே, பயனாளிகள் மற்றும் பொறுப்பதிகாரிகள் தாமதமின்றி உரிய காலத்திற்குள் இந்தப் பணிகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உங்கள் பகுதியில் உள்ள கல்வித் திட்டங்கள் குறித்த மேலதிக தகவல்களுக்கு எமது இணையதளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
