நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள கியூ ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை, எந்தவித தடையுமின்றித் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எரிபொருள் விநியோகம் குறித்த விளக்கம்:
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் எதிர்காலத்திலும் தடையின்றி எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, தற்போதைய விநியோக முறைமையில் மாற்றங்கள் ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்களுக்குத் தேவையில்லை.
தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டு அளவை அதிகரிப்பதற்கோ அல்லது குறைப்பதற்கோ எந்தவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை, தற்போதைய ஒதுக்கீட்டு எல்லைகளே தொடர்ந்து அமுலில் இருக்கும் என அவர் மேலும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
