சாதாரண தரப் பரீட்சை மீள் பரிசீலனை குறித்து சற்றுமுன் முக்கிய அறிவிப்பு

Valluvan Media
0

 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் பரிசீலனை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கை, இன்றுடன் (8.7.2026) நிறைவடைய உள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.



​விண்ணப்பிக்கும் முறை:

​கடந்த ஜூன் 25 ஆம் திகதி முதல் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. பாடசாலை மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் என அனைத்துப் பரீட்சார்த்திகளும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

​விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் பரீட்சார்த்திகள், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாக மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், குறித்த இணையத்தளம் மூலமாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

​இன்றுடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைவதால், மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top