​ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் அதிரடி மாற்றம்! கட்டாயமாக்கப்படும் நடைமுறை

Valluvan Media
0

ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு (ETF) பங்களிப்பு செலுத்துதல் மற்றும் மாதாந்திர அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. 



இதன்படி, 15 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட அனைத்து நிறுவனங்களும், இனிமேல் தங்களின் பங்களிப்பு மற்றும் அறிக்கைகளை முற்றிலும் டிஜிட்டல் வடிவத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று நிதியம் அறிவித்துள்ளது.

​ஆகஸ்ட் 30 ஆம் திகதி முதல் புதிய முறை:

​எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகைகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக இந்த உத்தரவு மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்காக, நியமிக்கப்பட்ட 9 வணிக வங்கிகள் ஊடாக விசேட டிஜிட்டல் வங்கி வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

​முதலாளிகளுக்கான வசதிகள்:

​குறிப்பிட்ட வங்கிகளில் கணக்கு இல்லாத முதலாளிகள், பிற வங்கிகள் மூலம் நேரடிப்பற்று (direct debit) முறையைப் பயன்படுத்தித் தடையின்றித் தங்களின் பங்களிப்புத் தொகையைச் செலுத்த முடியும். இந்த டிஜிட்டல் முறைமை மூலம் பணப் பரிமாற்றங்களை இலகுவாகவும், விரைவாகவும் மேற்கொள்ள முடியும் என நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

​இது தொடர்பான மேலதிகத் தகவல்களைப் பெறுவதற்கு, ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் தலைமை அலுவலகம் அல்லது அருகிலுள்ள கிளை அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம். அத்துடன், நிதியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.etfb.lk தளத்திலும் விரிவான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top