Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

முதியோர் கொடுப்பனவு தொடர்பில் சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு!

 2026 மே மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை அடுத்த திங்கட்கிழமை முதல் அஞ்சல் நிலையங்கள் (Post Offices) ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.



​முதியோர்களை உடனடியாக நலன்புரி நன்மைகள் சபையின் தரவுத்தளத்தில் உள்வாங்கி, 'அஸ்வெசும' கணக்குகள் ஊடாக மட்டுமே இனி வரும் காலங்களில் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் பணிப்பாளர் சதுர மிகிதும் தெரிவித்துள்ளார்.

​இரண்டு வழிகளில் வழங்கப்படும் கொடுப்பனவு:

​தற்போது முதியோர் கொடுப்பனவுகள் இரண்டு வெவ்வேறு வழிகளில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

  1. அஸ்வெசும வங்கி கணக்குகள் வழி: நலன்புரி நன்மைகள் சபையிடமிருந்து அஸ்வெசும நன்மைகளைப் பெறும் குடும்பங்களிலுள்ள முதியோர்களுக்கு, அவர்களின் அஸ்வெசும வங்கி கணக்குகள் ஊடாகவே நேரடியாகக் கொடுப்பனவுகள் செலுத்தப்படுகின்றன. அதன்படி அவர்களுக்கான மே மாத கொடுப்பனவுகள் கடந்த மே மாதம் 29ஆம் திகதியே வங்கிகளில் செலுத்தப்பட்டுவிட்டதாக சதுர மிகிதும் தெரிவித்துள்ளார்.
  2. அஞ்சல் நிலையங்கள் வழி: அஸ்வெசும கணக்குகள் இன்னும் இல்லாத அல்லது வங்கிக் கணக்குகளில் இருக்கும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாகக் கொடுப்பனவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த முதியோர்களுக்கு மட்டுமே, அடுத்த திங்கட்கிழமை முதல் அஞ்சல் நிலையங்கள் ஊடாகக் கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படவுள்ளதாக பணிப்பாளர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக