Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி! அரசின் அதிரடி திட்டம்

 இலங்கையில் உள்ள அனைத்து அரச ஊழியர்களுக்கும் சலுகை விலையில், தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் தலா 20 கிலோ அரிசியை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் மிக விரைவில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.



​இந்தத் திட்டம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க வெளியிட்டுள்ளார்.

​திட்டத்தின் விபரம்:

​இந்தத் திட்டம் குறித்து அமைச்சர் மேலும் விபரிக்கையில், "அரச ஊழியர்களுக்காக 20 கிலோ அரிசியை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான முன்மொழிவு விவசாய அமைச்சினால் எமக்குக் கிடைத்துள்ளது. இதன்படி, அரச ஊழியர்களுக்குச் சலுகை விலையில் அரிசி வழங்கப்படும். தலா 10 கிலோ வீதம் இரண்டு பொதிகளாகச் சிவப்பு அரிசி மற்றும் நாட்டரிசி வழங்கப்படவுள்ளது. அரச ஊழியர்கள் இதற்கான பணத்தைத் தவணை முறையிலேயே செலுத்த முடியும்" என்று தெரிவித்தார்.

​வவுச்சர் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம்:

​இந்த அரிசியைப் பெற்றுக்கொள்வதற்காக அரச ஊழியர்களுக்கு விசேட வவுச்சர் ஒன்று வழங்கப்படும். அந்த வவுச்சரைச் சமர்ப்பித்து, நாடளாவிய ரீதியிலுள்ள சதொச அல்லது கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாகத் தங்களுக்குத் தேவையான அரிசிப் பொதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

​"அனைவரும் நமது விவசாயிகளின் அரிசியை உண்ண வேண்டும் அல்லவா? அரசாங்கம் கொள்வனவு செய்யும் நெல்லை அரிசியாக்கி, மக்களுக்கு விநியோகம் செய்யும் முறையிலேயே இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது" என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

​அண்மைக்காலமாகப் பேருந்து கட்டண அதிகரிப்பு, எரிபொருள் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்புகள் மற்றும் தங்க விலை ஏற்ற இறக்கங்கள் போன்ற பொருளாதாரச் செய்திகள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரச ஊழியர்களுக்கான இந்த அரிசி வழங்கும் திட்டம் அவர்களுக்கு ஓரளவிலான நிதி நிவாரணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக