Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

தொடர்ந்தும் பாடசாலைகளுக்கு விடுமுறை : அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை!

 தெனியாய பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நான்கு முக்கியப் பாடசாலைகளை மேலும் மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.




சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெனியாய வலய கல்விப் பணிப்பாளர் நிஷாக ஹெட்டிகொட தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தேயு இரு மொழிக் கல்லூரி மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகியவை இன்று மற்றும் நாளை மூடப்பட்டிருக்கும்.

இந்தப் பாடசாலை மாணவர்களிடையே நோய் பரவுவது குறித்து சந்தேகம் கொண்டுள்ள சுகாதார அதிகாரிகள், இது Meningitis எனப்படும் மூளைக்காய்ச்சல் மூளைக் காய்ச்சலாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த நான்கு பாடசாலைகளும் 7 மற்றும் 8 ஆம் திகதிகளிலும் நோய் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

எனினும், அப்பகுதியில் மாணவர்களிடையே நோய் பரவும் போக்கைக் கருத்தில் கொண்டு, தென் மாகாண கல்விச் செயலாளர், சுகாதாரத் துறைகளின் ஆலோசனையின் பேரில், விடுமுறைக் காலத்தை மேலும் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிகுறிகளைக் காட்டிய பல மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், அப்பகுதி சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகமும் கல்வி அதிகாரிகளும் நிலைமையைக் கட்டுப்படுத்த கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், தங்கள் பிள்ளைகளை எவ்வித தாமதமுமின்றி உடனடி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்புமாறு பெற்றோர்களுக்கு சிறப்பு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக