Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

'கருப்பு' திரைப்படத்தின் கதை இப்படித்தான் உருவானதா? உண்மையை உடைத்த இயக்குனர்

 "நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக, சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் என் கழுத்தில் கத்தி வைத்து எனது நகையைப் பறித்துச் சென்றனர்.




பல வருடங்கள் கழித்து அந்த நகை மீட்கப்பட்ட போதிலும், அதனை நீதிமன்றம் மூலமாகத் திரும்பப் பெறுவதற்குப் பெரும் அலைச்சலைச் சந்திக்க நேரிட்டது.

இந்தச் சம்பவத்தை ஏன் ஒரு திரைப்படமாக எடுக்கக்கூடாது என்று யோசித்தேன்.

ஆனால், இந்த ஒரு புள்ளியை மட்டும் வைத்துப் பார்க்கும்போது கதைக்கான ஐடியா மிகச் சிறியதாகவே இருந்தது.
அதன் பின்னரே, மாசாணியம்மன் கோயிலில் மக்கள் மிளகாய் அரைத்து வழிபடும் நம்பிக்கையையும், எனக்கு நடந்த இந்தச் சம்பவத்தையும் இணைத்து ஒரு கதையை உருவாக்கினேன்.

இப்படித்தான் 'கருப்பு' திரைப்படத்தின் கதை உருவானது.
என்று இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி விவரித்துள்ளார்.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக