பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் மெனிஞ்சைடிஸ் வைரஸ் நோய் நிலைமை பரவி வருகின்றபோதிலும் அது தொடர்பில் பயம் கொள்ளத் தேவையில்லை என பிரதான தொற்றுநோயியல் நிபுணர் விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.
அதன்படி, மெனிஞ்சைடிஸ் எனும் மூளைக்காய்ச்சல் தியத்தலாவையில் 28 நோயாளர்களும் வெலிமடையில் 13 நோயாளர்களும் ரிகில்லகஸ்கட பகுதியில் 25 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
கடுமையான காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
