'அஸ்வசும' நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத் தகவல்களைப் புதுப்பிப்பதற்கான கணக்கெடுப்பு நடவடிக்கைகள் வரும் மே 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
நாட்டின் உண்மையான வறிய மக்களைக் கண்டறிந்து விரைவாக நிவாரணம் வழங்குவதே இதன் நோக்கமாகும். எனவே, வீடுகளுக்கு வரும் அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் துல்லியமான தகவல்களை வழங்கி ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நலன்புரி உதவிகளைப் பெற திட்டமிட்டுப் பொய்யான தகவல்களை வழங்கினால், நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனச் சபையின் தலைவர் நிமல் கொடவலகெதர எச்சரித்துள்ளார்.
