Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்! இலங்கைக்கு மீண்டும் பாரிய ஆபத்து

 இலங்கையில் நிலவும் குறைந்த காற்றழுத்தப் பகுதி குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




அதன்படி, வங்காள விரிகுடாவில் நிலவிய கீழ் வளிமண்டலக் கொந்தளிப்பு, 10.1° வடக்கு, 82.5° கிழக்கு என்ற அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைக்கு அருகில் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதியாக உருவாகியுள்ளது.
இந்த அமைப்பின் தாக்கத்தால், நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், குருநாகல், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (11.05.2026) இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று பிற்பகல் 1 மணிக்கு மேல் குறிப்பிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் பலத்த மின்னலும் ஏற்படும்.அந்த நேரத்தில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
எனவே மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம்  பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

இந்தச் செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக