சற்றுமுன் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

Valluvan Media
0

 இலங்கையின் நுகர்வோர் சந்தையில் நிலவும் அரிசி தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் மாற்று அரிசி இரகமான ஜிஆர் 11-ஐ இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




இலங்கையின் நுகர்வோர் சந்தையில் நிலவும் அரிசி தேவையினை பூர்த்தி செய்யவும், உள்நாட்டுச் சந்தையில் அரிசி விலையினை நிலைப்படுத்தவும் அரசாங்கம் இந்த தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய, நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் குறிப்பிட்ட சில அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு 'இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமம்' பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
1006.30.29 என்ற வகைப்பாட்டு குறியீட்டின் கீழ் வரும் GR 11 ரக அரிசி, பொன்னி சம்பா மற்றும் சம்பா மற்றும் கீரி சம்பாவிற்கு மாற்றீடாக கருதப்படும் கிரி/பால் பொன்னி ஆகிய அரிசி வகைகளுக்கு இந்த சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அரிசித் தொகுதிகளின் கப்பலேற்றப்பட்ட திகதி 2026 ஏப்ரல் 02 முதல் 2026 ஏப்ரல் 30 வரை இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளின் கீழ் ஒரு இறக்குமதியாளர் அதிகபட்சமாக 1,040 மெட்ரிக் தொன் அரிசியை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் அரிசித் தொகுதிகள் 2026 மே 31 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.அதன்படி, இந்த அரிசி இரகத்தை ஏற்றி வரும் முதல் கப்பல் அடுத்த வாரம் நாட்டிற்கு வரவிருப்பதாக அரிசி இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2026 மார்ச் 26 அன்று சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு அமைச்சரவைப் பத்திரத்திற்கு, 2026 மார்ச் 30 அன்று வழங்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைவாக இந்த ஒழுங்குவிதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top