Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

கொழும்பில் 62.9 கோடி பரிசு!! பெறப்போவது யார்? முந்தியடிக்கும் கூட்டம்!

 இலங்கையின் அதிஸ்ட லாப சீட்டிழுப்பில் அதிகூடிய பரிசுத் தொகைக்கான காசோலை இன்று (10) வழங்கப்படவுள்ளது.




வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய அதிஸ்ட லாபச் சீட்டுப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது.

பரிசுத் தொகை: 629,855,919.60 ரூபாயாகும் அதாவது சுமார் 62.9 கோடி ரூபாய்.

அபிவிருத்தி லொத்தர் சபையினால் நடத்தப்படும் ‘ஜயமல்ல கப்புரக” அதிஸ்டலாப சீட்டு ஒன்றிலேயே இந்த தொகை வெல்லப்பட்டுள்ளது.

2026, பெப்ரவரி 19 அன்று இந்த அதிர்ஷ்டக் குலுக்கல் நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த காசோலை வழங்கும் விழா இன்று (10) கொழும்பில் உள்ள அபிவிருத்தி இலாபச் சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக