Top News

தாதியர் சேவைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்!

 இலங்கையின் சுகாதாரத் துறையில் நிலவும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், 2,918 புதிய மாணவ தாதியர்களைப் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.




நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு  (14) சனிக்கிழமை  அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. 

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர்  ஹன்சக்க விஜேமுனி ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான தாதியர் பயிற்சிக்காக, 2022ஆம் ஆண்டு அணியிலிருந்து,  தகுதிகளின் அடிப்படையில் சுமார் 2,918 விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பயிற்சி நியமனக் கடிதங்களே இதன்போது வழங்கி வைக்கப்படவுள்ளன.  

Post a Comment

Previous Post Next Post