முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்ரமசிங்கவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 20ஆம் திகதி முன்னிலையாகுமாறு மைத்திரி விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

Post a Comment