Top News

இலங்கை வான்பரப்பில் வெளிநாட்டு போர் விமானங்கள்- தீவிர உச்சக்கட்டத்தில் போர்!

 இலங்கை வான்வழியில் வெளிநாட்டு இராணுவ விமானங்களுக்கு செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என இலங்கை விமானப்படை மறுத்துள்ளது.



அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது மேற்கொண்ட இராணுவ தாக்குதல்களின் பின்னர், இலங்கையிலும் வானில் இராணுவ விமான இயக்கம் அதிகரித்துள்ளதாக சிலர் ஊகித்த நிலையில், இது குறித்து பொதுமக்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்த விமானப்படை பேச்சாளர், அண்மையில் காணப்படும் விமான இயக்கங்கள் அனைத்தும் உள்நாட்டு நடவடிக்கைகளுக்கானவையாகும் என்றும், திட்டமிட்ட பயிற்சிகளின் ஒரு பகுதியாக நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

இந்த பயிற்சிகள், விமானப்படையின் 75ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடத்தப்படுகின்றன.
75ஆம் ஆண்டு விழா நிகழ்வுகள் 2026 மார்ச் 2ஆம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளம் இல் நடைபெறும் முக்கிய விமானப்படை தின அணிவகுப்புடன் ஆரம்பமாகும்.

Post a Comment

Previous Post Next Post