நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கியூஆர் (QR) முறைமையை எதிர்காலத்திலும் கடுமையாக செயல்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக, துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போது நிலவும் நெருக்கடியான காலகட்டத்தில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
