அரச நிறுவனங்களில் இன்று முதல் அதிரடி தடை! வெளியானது அறிவிப்பு

Valluvan Media
0

 நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும், தனி ஒருவர், ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் இன்று முதல் தடைவிதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.




பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி மன்ற அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரச நிறுவனங்களுக்குத் தேவையான பாரிய கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சின் செயலாளர் சூரியன் செய்திப் பிரிவுக்குக் குறிப்பிட்டார்.

புதிய சுற்றறிக்கையின்படி, அரச நிறுவனங்களுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் பயன்பாட்டைத் தடுக்க நிறுவனங்களின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top