Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

இலங்கையில் வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

 அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வாகனங்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.




சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு ஏற்ப வாகனங்களின் விலைகள் சுமார் 10 சதவீதத்தால் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறிப்பிட்ட சில வாகனங்களின் உத்தேச விலை அதிகரிப்பு பின்வருமாறு:

Raize: 140 இலட்சம் ரூபாயாக இருந்த விலை, சுமார் 8 முதல் 10 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும்.

நாட்டில் விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை! அவசரமாக வெளியான அறிவிப்பு

Vezel: இதன் விலை சுமார் 12 இலட்சம் ரூபாயால் உயர வாய்ப்புள்ளது.

Yaris: இதன் விலை 4 முதல் 5 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும்.

Land Cruiser: தற்போதைய சூழ்நிலையில் இதன் விலை சுமார் 30 இலட்சம் ரூபாயால் அதிகரிக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் சில வாரங்களில் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக