Top News

அதிகரிக்கிறதா? பேருந்து கட்டணம்! சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு

 எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கூட, பேருந்து கட்டணத்தில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.




இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02.05.2026) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்தது.
இந்த நிலையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு மேலதிக சுமை ஏற்படாமல் பாதுகாப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையெனில் எதிர்காலத்தில் பொருத்தமான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post