கடந்த வார இறுதியில் ஈரானுக்கு மேல் சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டு அமெரிக்க விமானப்படை வீரர்களை மீட்ட மீட்பு நடவடிக்கையின் "வெற்றியை" நிர்வாகம் கொண்டாடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் செய்தியாளர் சந்திப்பு தற்போது (6) இடம்பெற்று வருகின்றது.
இதுபோன்ற பணிகள் பொதுவாக மேற்கொள்ளப்படுவதில்லை "பெரும் திறமையாளர்கள்" ஈடுபட்டிருந்தனர் ஆனால் தங்களுக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டமும் கிடைத்தது என்று குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையை "வரலாற்றுச் சிறப்புமிக்கது" என வர்ணிக்கும் ட்ரம்ப், அமெரிக்க இராணுவத்தில் "நாங்கள் எந்தவொரு அமெரிக்கரையும் கைவிடுவதில்லை" என்பதை இது காட்டுகின்றது.
ட்ரம்ப் ஈரானை "தீய நாடு" என்று அழைப்பதோடு, முன்னதாக சமூக ஊடகங்களில் தான் பதிவிட்டிருந்த அந்நாட்டின் குடியுரிமை உள்கட்டமைப்புக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஒரே இரவில் நாடு முழுவதையும் முடக்கிவிட முடியும், அந்த இரவு நாளை இரவாகக் கூட இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment