Top News

அரசு நிறுவனங்கள் இயங்குமா? சற்றுமுன் அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

 அரச நிறுவனங்கள் இன்றும் வழமை போன்று இயங்கும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.




அதன்படி, அரச நிறுவனங்கள் நேற்று (15) முதல் நாளை வெள்ளிக்கிழமை (17) வரை வழமை போன்று இயங்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அரச நிறுவனங்கள் நேற்றையதினம் முறையாக இயங்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்திருந்திருந்தனர்.

இந்தநிலையில் இன்று அரச நிறுவனங்கள் வழமை போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சித்திரை புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர், பொதுமக்களுக்கான சேவைகளைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்யுமாறு அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post