கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!!
தற்போது பிராந்தியத்தில் நிலவிவரும் சூழ்நிலையை தாங்கள் கண்காணித்து வருவதாகவும், கத்தாரில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
கத்தார் அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் பாதுகாப்பு விதிகளையும் நடைமுறைகளையும் எப்போதும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
அத்தோடு தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம், Facebook, Instagram மற்றும் X (Twitter) பக்கங்களில் பகிரப்படும் செய்திகளையும் அறிவிப்புகளையும் தொடர்ந்து கவனியுங்கள்.
உங்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், தூதரகத்தை கீழ்க்கண்ட வழிகளில் தொடர்பு கொள்ளலாம்:
அவசர தொலைபேசி எண்: +974-30451601
மின்னஞ்சல்:emergency.sldoha@mfa.gov.lk

Post a Comment