Top News

அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு!

 மின்சார நெருக்கடிக்கு மத்தியில் அரச ஊழியர்களுக்கு எரிசக்தி சேமிப்பு வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.



அதன்படி மின்சாரம் மற்றும் எரிசக்தி பயன்பாட்டைச் சேமிப்பது குறித்து அத்தியாவசிய சேவைகள் ஆணையர் அலுவலகம், அரச ஊழியர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை இன்று (30.03.2026) வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையில், அனைத்து அமைச்சகங்கள், மாகாணசபைகள், மாவட்டச் செயலகங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் உடனடியாக எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்களின்படி, அனைத்து அரச நிறுவனங்களும் பிற்பகல் 3 மணிக்குள் குளிரூட்டிகளை (ஏர் கண்டிஷனர்களை) அணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களும் இதே நடவடிக்கையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
பல்வேறு இடங்களில் உள்ள டிஜிட்டல் விளம்பரத் திரைகள் இரவு 8 மணிக்குள் அணைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தெருவிளக்குகளை அணைப்பதற்கான உரிய திட்டங்களைச் செயல்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இசை நிகழ்ச்சிகள் மற்றும் அதுபோன்ற நிகழ்வுகள் உட்பட 100க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கூடும் பெரிய அளவிலான கூட்டங்கள், தேசிய மின் கட்டமைப்புக்குப் பதிலாக மாற்று மின் மூலங்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post