ஹபராதுவ, ஹெண்டிவத்த பகுதியில் கடலில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் தனது நண்பர்களுடன் இணைந்து கடலில் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இவ் அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அப் பகுதி மக்கள், கடற்கரை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து சிறுவனை மீட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்த்த பின்னர் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment