Top News

இரண்டு பச்சிளம் உயிர்களை பறியெடுத்த கொடூர விபத்து! இலங்கையை உலுக்கிய சோகம்!

 புத்தளம், மதுரங்குளிய பொலிஸ் பிரிவின் கிளிமடுச்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில், 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.




கிளிமடுச்சேனை பகுதியைச் சேர்ந்த 8 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மதுரங்குளியவில் இருந்து ரணவிரு வசந்த மாவத்தை வழியாக குருங்கன்வெட்டிய நோக்கி பயணித்த லொறி, எதிர் திசையில் இருந்து வந்த இரு சிறுவர்கள் பயணித்த சைக்கிளில் மோதியது.
அப்போது இரண்டு சிறுவர்கள் பலத்த காயமடைந்து புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, மதுரங்குளிய பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Post a Comment

Previous Post Next Post