Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்!

 அந்நிய செலாவணியை பாதுகாப்பதற்காக வாகன இறக்குமதியை குறைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ அரசாங்கத்திற்கு உடனடித் திட்டங்கள் எதுவும் இல்லை என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.




ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் வெளிநாட்டு நிலைமை சீராக உள்ளது. அந்நியச் செலாவணிக் கையிருப்பு 7 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.

வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தில் சரிவுக்கான உடனடி அறிகுறிகள் எதுவும் இல்லை. தற்போது மத்திய கிழக்கில் பெரிய அளவிலான தொழிலாளர் பணிநீக்கம் எதையும் நாங்கள் காணவில்லை.சமீபத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதை ஒப்புக்கொண்டாலும், இது தற்போதைய நிலையில் ஒரு பெரிய கவலைக்குரிய விஷயம் அல்ல.

அதிகாரிகளால் இது உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், தற்போது நாட்டிற்குள் கொண்டுவரப்படும் வாகனங்கள் அல்லது பிற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த உடனடித் தேவை இருப்பதாக நாங்கள் கருதவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக