Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

இலங்கையில் நடந்த கொடூரம் - மனைவியை விரட்டி விரட்டி கொலை செய்த கணவன்!

 மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் கேகாலை, அரநாயக்க பகுதியில் இன்று அதிகாலை அரங்கேறியுள்ளது. ஒரு உயிரைக் காக்கும் செவிலியரின் உயிர், அவர் நேசித்த கணவனாலேயே காவு வாங்கப்பட்டிருப்பது அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




​🔍என்ன நடந்தது?
​அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் செவிலியராகப் பணியாற்றி வந்த ருவினி மதுஷிகா (35) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.​வழக்கம் போல இன்று அதிகாலை தனது கடமைக்காக வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, மறைந்திருந்த கணவன் புலி போலப் பாய்ந்துள்ளார். கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தைக் கண்டதும் ருவினி அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளார். ஆனால், இரக்கமற்ற அந்தக் கணவன் அவரை வீதி வழியே விரட்டிச் சென்று சரமாரியாகக் குத்திச் சாய்த்துள்ளான்.

​💔 பிணக்கான பின்னணி
​விசாரணைகளின்படி, இவர்களுக்கிடையில் நீண்டகாலமாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் கணவனைப் பிரிந்து தனது பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த நிலையிலேயே, இந்தத் திட்டமிட்ட படுகொலை நடந்துள்ளது.

​🔍 தற்போதைய கள நிலவரம்..
​கொலையாளி எங்கே? கொலையைச் செய்துவிட்டுத் தப்பியோடிய கணவனைப் பிடிக்க அரநாயக்க பொலிஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

⚕️​அதிர்ச்சியில் வைத்தியசாலை..சக ஊழியரின் இந்த அகால மரணத்தைக் கேட்டு அரநாயக்க வைத்தியசாலை ஊழியர்கள் கண்ணீர் மல்க உறைந்து போயுள்ளனர்.

அனாதையான பிள்ளைகள்: தாயை இழந்து, தந்தை தலைமறைவாகியுள்ள நிலையில், இரு பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக