Top News

திருமணமாகவிருந்த இளம் ஜோடிக்கு நேர்ந்த சோகம்!

 தம்புள்ளையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட தம்பதி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.




பெற்றோர்களினால் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தம்பதி 3 மாதங்களின் பின்னர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

தம்பதியினரின் இறுதிச் சடங்குகள் இன்று மதியம் யாபகம பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளது.
தம்புள்ள யாபகமவைச் சேர்ந்த 22 வயதுடைய டிலந்த பூர்ணா என்ற இளைஞரும், அவரது வருங்கால மனைவியான நவோத்யா செனவிரத்ன என்ற இளம் பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கம்பஹா பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த இந்த ஜோடி அதே பகுதியிலுள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்தனர்.

விடுமுறைக்காக தம்புள்ளையில் உள்ள தங்கள் பெற்றோர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிள்களில் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது கண்டி-கொழும்பு பிரதான வீதியில் உள்ள வத்துபிடிவல பகுதியில் பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

👉 உங்கள் கருத்தை comment செய்யுங்கள்
👉 இந்த செய்தியை share செய்யுங்கள்


Post a Comment

Previous Post Next Post