2026 ஆம் ஆண்டில் உலகம் சந்திக்கப் போகும் பொருளாதார மாற்றங்கள் குறித்து பல்கேரியாவின் புகழ்பெற்ற தீர்க்கதரிசியான பாபா வங்காவின் கணிப்புகள் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
பாபா வங்காவின் கணிப்புகள் குறித்து சில சந்தேகம் இருந்தாலும், அவரது கணிப்புகள் சில நிஜமாகியுள்ளன.இவை தொடர்ந்தும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் பாபா வங்காவின் கணிப்புப்படி, எதிர்காலத்தில் பணத்தின் மதிப்பு உலகளவில் வீழ்ச்சியடையும். இதனால் பணப்புழக்கம் குறைந்து, மக்கள் பணத்தின் மீதான நம்பிக்கையை இழப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026ல் நிலநடுக்கங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் உலக சங்கிலியை பாதித்து பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்தும். செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார முறைகள் பெரும் மாற்றத்தை சந்திக்கும் என்று பாபா வங்கா கூறியுள்ளார்.
பொருளாதார வீழ்ச்சியின் பொழுது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடமாக உலோகங்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று பாபா வங்கா கூறியுள்ளார்.
தங்கம் வெள்ளி மற்றும் செப்பு ஆகியவற்றின் விலைகள் இதுவரை கண்டிராத அளவிற்கு உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாகவும், வெள்ளி மற்றும் செப்பு ஆகியவை தங்கத்திற்கு இணையான முக்கியத்துவம் பெறும் என்றும் அவர் கணித்துள்ளார்.

Post a Comment