Top News

திடீரென நடுங்கிய பூமி! பதற்றத்தில் மக்கள்

கொல்கத்தாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியயுள்ளதால் வீதிகளில் மக்கள் திரண்டுள்ளனர்.




மேற்கு வங்கத்தின் பிற பகுதிகள் மற்றும் கொல்கத்தாவில் நண்பகல் 1.22 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டர் அளவுகோலில் 5.5 ஆக நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பொருள் சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்பட்டதாக என்ற தகவலும் வெளியாகவில்லை. 

கொல்கத்தாவில் இம்மாதத்தில் இதுபோன்ற நிலநடுக்கம் ஏற்படுவது இது 2ஆவது முறையாகும். கடந்த 3ஆம் திகதி இதேபோன்றதொரு நிலநடுக்கம் கொல்கத்தாவில் பதிவானமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post