Valluvan Media
LIVE NEWS
Loading breaking news...

சற்றுமுன் இடம்பெற்ற கொடூரம்! மனைவியின் தலையை துண்டித்த கணவன்!

 காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  இவ்வாறு 32 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயான மஹாபடகே இரேஷா மதுமாலி என்பவர் உயிரிழந்துள்ளார்.கொலை செய்யப்பட்ட பெண் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தமை காரணமாக கொலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

தனது மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை, வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள குறித்த பெண்ணுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டு முற்றத்தில் வீசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து இன்று காலை அவர் தானாக முன்வந்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரான 34 வயதுடைய பெண்ணின் சட்ட கணவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர் என்றும், இன்று (20) உடுகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

👉 Read Full Details

இந்த செய்தி குறித்த உங்கள் உணர்வு என்ன?

×

வள்ளுவன் மீடியா - செய்தி அனுப்புக