ஒரு நாளைக்கு இரண்டு முறை குளியுங்கள்! ஏன் இந்த எச்சரிக்கை!

Valluvan Media
0

 சமகாலத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது குளிக்க வேண்டும் என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.




இந்த நாட்களில் காலையிலும் மாலையிலும் தலா 20 நிமிடங்கள் சிறுவர்கள் குளிப்பதே பொருத்தமானது என அவர் கூறியுள்ளார்.

பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சூரியனின் உச்சம் காரணமாக, வெப்பமான வானிலை நாட்டை பாதிக்கும்.

இந்த வானிலை காரணமாக அதிகப்படியான நீர் மற்றும் உப்பு இழப்பு சக்தி ஏற்பட்டால், சிலர் தங்கள் உயிரை கூட இழக்க நேரிடும் எனவும் அவர் வலியுறுத்தினார்.



உடலில் இருந்து அதிகப்படியான நீர் மற்றும் உப்பு இழப்பு வெப்ப பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். இந்த நிலை நீரிழப்பு காரணமாக ஏற்படுகிறது.

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள், மரதன் மற்றும் புத்தாண்டு விளையாட்டுகள் இந்த நாட்களில் நடத்தப்படுகின்றன.

இந்த போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து இளைஞர்களும் முதியவர்களும் ஏராளமான தண்ணீர் மற்றும் திரவங்களை குடிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
Contact for Advertising
+94 740 868 731
RV Multi Shop
To Top