2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், வானியலாளர்கள் GRB 250314A என்று அழைக்கப்படும் ஒரு அபூர்வமான காமா-கதிர் வெடிப்பை (Gamma-ray Burst) பகுப்பாய்வு செய்தனர். வெறும் 10 வினாடிகள் மட்டுமே நீடித்த இந்த வெடிப்பு, முழு விண்மீன் மண்டலங்கள் நீண்ட காலம் வெளியிடும் ஆற்றலை விட அதிகமான ஆற்றலை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த ஒளிச் சிதறல் சுமார் 1300 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவிலிருந்து பூமியை வந்தடைந்துள்ளது. அதாவது, இந்த சிக்னல் தனது பயணத்தைத் தொடங்கியபோது பிரபஞ்சத்தின் வயது அதன் தற்போதைய வயதில் வெறும் 5% மட்டுமே — சுமார் 730 மில்லியன் ஆண்டுகள். இதன் மூலம், பிரபஞ்சம் உருவான ஆரம்ப கட்டத்திலேயே இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது என்பது தெரிய வருகிறது.
இந்த சிக்னல் முதலில் 2025 மார்ச் மாதத்தில் SVOM செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்பட்டது. பின்னர் சர்வதேச ஆய்வகங்கள் தொடர்ந்து கண்காணித்து இதை உறுதி செய்தன.
பிரம்மாண்டமான நட்சத்திரங்கள் அழிந்து கருந்துளைகளாக மாறும்போது அல்லது நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மோதும்போது இத்தகைய அதீத ஆற்றல் கொண்ட காமா-கதிர் வெடிப்புகள் நிகழ்கின்றன.
இது பூமிக்குத் திட்டமிட்டு அனுப்பப்பட்ட எந்தவொரு செய்தியும் அல்ல; இது இயற்கையாக நிகழ்ந்த பிரபஞ்ச வெடிப்பு. இருப்பினும், பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தில் முதல் நட்சத்திரங்களும் விண்மீன் மண்டலங்களும் எவ்வாறு உருவாயின என்பதைக் புரிந்துகொள்ள இந்த நிகழ்வு விஞ்ஞானிகளுக்கு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது.
பிரபஞ்சத்தின் ஆரம்ப அத்தியாயங்களின் எதிரொலியை இன்றும் நாம் கண்டறிய முடிகிறது என்பதற்கான சிறந்த உதாரணமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
Post a Comment